PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு கூடுதல் வட்டி!
பணியாளர்களின் PF தொகைக்கான வட்டி தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
PF தொகைக்கு கூடுதல் வட்டி:
தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகை வட்டியுடன் அளிக்கப்படுகின்றன. மேலும் நடப்பு ஆண்டில் PF தொகைக்கான வட்டி தொகை உயரும் என்று பணியாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் PF தொகைக்கான வட்டி தொகையை உயர்த்துவது குறித்து அடுத்த மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து, ஆனால் ‘இது’ கட்டாயம் – மாநில அரசின் அதிரடி உத்தரவு!
இந்த தகவல் குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியது, பணியாளர்களுக்கு பிராவிடண்ட் நிதி அமைப்பின் நிர்வாக ஆலோசனைக் கூட்டம்,உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகு மார்ச் 2வது வாரத்தில் கவுகாத்தியில் நடைபெற உள்ளதாகவும் மற்றும் 2021- 2022 ஆண்டு நிதியாண்டு நிறைவடைய உள்ள நிலையில் பணியாளர்களுடைய PF தொகைக்கான வட்டி தொகையை உயர்த்துவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை: நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
இதுவரை EPF திட்டத்தின் கீழ் 2020 -2021ம் ஆண்டுக்கான PF தொகைக்கு 8.5 % வட்டி வழங்கப்பட்டு உள்ளது. இந்த வட்டி விகிதம் கடந்த 8 வருடங்களிலேயே குறைவான வட்டி தொகை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது EPFO திட்டத்தில் 60 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தாக்கம் காரணமாக பல நிறுவனங்களில் ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், பணியாளர்கள் தங்களுடைய EPFO டெபாசிட்டுகளுக்கான வட்டி உயர்த்தப்படுமா என்று பணியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.