ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து, ஆனால் ‘இது’ கட்டாயம் – மாநில அரசின் அதிரடி உத்தரவு!
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இரவு ஊரடங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என ஆந்திர மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநில அரசு எச்சரிக்கை:
கொரோனா 3 வது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடங்கியது. இரண்டாம் அலை சற்று ஓய்ந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு அளித்து அனைத்து மாநிலங்களிலும் உத்தரவு போடப்பட்டது. இருப்பினும் கொரோனா 3 வது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்தது. இதனால் தொற்று பாதித்த மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது.
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய திட்டம் அறிமுகம்!
இந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கடந்த மாதம் கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்ட நிலையில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் பயனாக மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் அமலில் இருந்த இரவு ஊரடங்குக்கு தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TNPSC 545 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
இந்த வகையில் ஊரடங்குக்கு தடை அளிக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை பொது இடங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், மாஸ்க் அணியாவிட்டால் 10,000 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு வரும் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.