மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் ரூ.6000 நிதியுதவி – ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசின் PM கிசான் என்ற நிதி உதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 தொகையை பெற்றுக்கொள்ள பயனாளிகள் e-KYC செயல்முறையை முடிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் தற்போது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டம்
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் மிகப்பெரிய நிவாரணம் அளித்துள்ளது. அதாவது கடந்த மே 31ம் தேதியன்று PM கிசான் திட்டத்தின் 11வது தவணை தொகையை கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதில் சில பயனாளிகள் 11 தவணை பணத்தை பெறவில்லை. இதற்கு e-KYC செயல்முறையை முடிக்காதது முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் PM கிசான் திட்டத்தின் கீழ் e-KYCஐ முடிப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் மீண்டும் நீட்டித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இப்போது PM கிஷான் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்கள் ஜூலை 31 வரை e-KYC செய்து கொள்ளலாம். இதற்கான காலக்கெடு முன்னதாக மார்ச் 31 லிருந்து மே 31 ஆக நீட்டிக்கப்பட்டது. ஏனெனில் கிஷான் பயனாளிகள் இன்னும் e-KYC செயல்முறையை முடிக்காததால் இந்த காலக்கெடு இப்போது மீண்டுமாக ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது PM கிசான் பயனாளிகள் ஆன்லைனில் OTP மூலம் ஆதார் அடிப்படையிலான e-KYC செயல்முறையை முடிக்க முடியும்.
இதற்காக முதலில் PM கிஷான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ க்கு செல்லவும். பிறகு ‘Farmers Corner’ என்பதன் கீழ் உள்ள e-KYC டேப்பில் கிளிக் செய்யவும். அங்கு திறக்கும் புதிய பக்கத்தில், ஆதார் எண்ணின் தகவலைக் கொடுத்து தேடல் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். பின்னர் ‘சமர்ப்பி OTP’ என்பதைக் கிளிக் செய்து OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். இப்படி செய்தால் e-KYC செயல்முறை கிசான் கணக்குடன் இணைக்கப்படும்.