தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு – பள்ளிகல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு இல்லை என்று வெளியான தகவல் தவறானது என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு:
தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெகு நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் விரைந்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கத்தால் பொதுத்தேர்வுவதை ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பீடு முறையில் தான் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. பிற வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? எக்ஸ்.இ தொற்று எதிரொலி!
தற்போது நேரடி வகுப்புகள் நடப்பதால் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. மேலும் மற்ற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தொடக்க வகுப்புக்கான 1 – 5 வரையிலான வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறாது என்று தகவல் வெளியானது. மேலும் 6 – 9ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் இது குறித்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார் இதுகுறித்து பேசிய அவர் 1ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றும், குறைந்த பாடத்திட்டத்தில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்வு குறித்து அப்போது புதில்லையா அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் எதை நம்புவது என்று தெரியாமல் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர்.