தீவிரமடையும் கொரோனா பாதிப்புகள் – திடீரென மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு!
இந்தியாவில் கொரோனா பரவல் பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
கொரோனா பாதிப்புகள்
கடந்த ஒரு சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் 1000ஐ தாண்டி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் எழுச்சியினால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 10,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், பொது மக்கள் அனைவரும் மீண்டுமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்த துவங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் மத்திய அரசும், கொரோனா தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எச்சரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது மரபணு வரிசை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவித்திருந்தார். தொடர்ந்து நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் மாநில அரசுகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (ஜூன்29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பி இருக்கிறது. அதாவது அடுத்து வரும் மாதங்களில் பண்டிகைகள், திருவிழாக்கள், யாத்திரைகள் ஆகியவை நடத்தப்பட இருப்பதால், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசாங்கம் வலியுறுத்தி இருக்கிறது.