தமிழகத்தில் நாளை (ஜூன்29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூன்29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன்29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன்29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

ராமநாதபுர மாவட்டம் பட்டினம்காத்தான் துணை மின் நிலையத்தில் நாளை(ஜூன்29) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் பயனர்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மின் பராமரிப்பு பணிகளின் போது மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் சரி செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மின் பயனர்கள் முன் கூட்டியே மின் சார்ந்த பணிகளை முடித்து விடுகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை ராமநாதபுர மாவட்டம் பட்டினம்காத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியின் பாரதிநகா், நேருநகா், மகாசக்தி நகா், புளிக்காரத் தெரு, குமரையா கோவில் தெரு, பட்டிணம்காத்தான் வரிவசூல் மையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டம் முதல் டெபிட் கார்டுக்கான வசதிகள் வரை – ஜூலை 1 முதல் வரவிருக்கும் மாற்றங்கள்!

அதே போல ரகுநாதபுரம், உப மின்நிலைய அலுவலகத்துக்கு உட்பட்ட ரகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை கும்பரம், இருட்டூரணி, காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!