ஆதிரை கரிகாலன் திருமணத்தை நிறுத்த மொத்த குடும்பமும் செய்த வேலை – குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு!
தற்போது சின்னத்திரையில் High Voltage ட்ராக் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல். இதில் ஆதிரைக்கு கரிகாலனுடன் திருமணம் நடந்து விடுமோ என்ற ட்விஸ்ட் தான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்நீச்சல்:
கோலங்கள் சீரியல் புகழ் இயக்குனர் திருச்செல்வம் அவர்களால் தற்போது இயக்கப்பட்டு வரும் தொடர் எதிர்நீச்சல். பெண்களை அடிமையாக நடத்தும் ஒரு குடும்பத்தில் மருமகளாகும் நாயகி எவ்வாறு அங்கிருக்கும் பெண்களின் சுதந்திரத்தை மீட்டு எடுக்கிறாள் என்பதே இந்த சீரியலின் கதைக்களம். இந்நிலையில் இந்த சீரியலில் ஆதிரைக்கு வேண்டுமென்றே கரிகாலனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் குணசேகரன்.
Follow our Instagram for more Latest Updates
வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. தற்போது எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. வீட்டில் உள்ளவர்களை எதிர்த்து திருமணம் வரை கொண்டு போய்விடுகிறார் குணசேகரன். இதனால் இந்த திருமணத்தை நிறுத்த பிளான் போடுகிறார் குடும்பத்தினர்.
குடும்ப பெயர் கெட்டாலும் பரவாயில்லை, ஆதிரையின் வாழ்க்கை தான் முக்கியம் என்று குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் சக்தி அனைவரும் சேர்ந்து கோவிலில் குணசேகரனுக்கு தெரியாமல் ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த பரபரப்பான காட்சிகள் அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.