CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (பிப்.15) முதல் தொடக்கம் – வழிமுறைகள் வெளியீடு!!
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (பிப். 15) ஆம் தேதி தொடங்கப்பட இருக்கும் நிலையில் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
பொதுத்தேர்வு அறிவிப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி இன்று (பிப்.15) முதல் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. இன்று காலை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய தேர்வு நடைபெற இருக்கிறது. அதே போல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பாடத்தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்திய அஞ்சல் துறையில் 40,800+ பணியிடங்கள் -மாதம் ரூ.29,380/-ஊதியம் | விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய பாட தேர்வுகள் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி, பகல் 12.30 வரை நடைபெற இருக்கிறது. அதேபோல் சில தேர்வுகள் 1.30 மணி வரை நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களான வழிமுறைகள் சில தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி தேர்வர்கள் தேர்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் எனவும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் எனவும் CBSE தெரிவித்துள்ளது. தேர்வர்கள் இந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருக்கும் 10 ஆம் வகுப்பு ஓவியப் பாடத் தேர்வில் சுமார் 4000 மாணவ, மாணவிகளும், 12 ஆம் வகுப்பின் தொழில்முனைவு பாடத் தேர்வில் 1643 மாணவர்களும் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.