EPFO பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!
மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் தொகை EPF தொகையில் சேராது என்பதால் இன்டர்ன்ஷிப் உதவித்தொகையை EPF லிருந்து விலக்குவது எப்படி என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்டர்ன்ஷிப்:
பிஎஃப் என்பது அரசின் கீழ் செயல்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12% அல்லது அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்துவார்கள். இந்தத் தொகைக்கு வட்டி விகிதமும் கொடுக்கப்படும் மற்றும் வரி சலுகையும் கிடைக்கும். மேலும், EPFO வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்களும், ஊழியர்களும் எக்கச்சக்கமான பலன்களை பெற்று வருகின்றனர்.
ஏதேனும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு மட்டுமே PF தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு நிறுவனத்தில் சேரும்போது ஒரு பயிற்சி அளிக்கும் போது அந்த பயிற்சியாளருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், கல்வி நிறுவனம் மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் தொகை EPF தொகையில் சேராது. இதனால், இன்டர்ன்ஷிப்பின் தன்மையைப் பொறுத்து பயிற்சியாளருக்கு வழங்கப்படும் உதவித்தொகையிலிருந்து EPF கழிக்கப்படும்.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி – அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
மேலும், இன்டர்ன்ஷிப் உதவித்தொகையை EPF லிருந்து விலக்குவதற்கான நிபந்தனைகளும் உள்ளன. அதாவது, கடந்த ஜூலை மாதம் வெளியான அறிக்கையின்படி வெளியிட்டுள்ள நிபந்தனைகள் இருந்தால் இன்டர்ன்ஷிப் உதவித்தொகையை EPF லிருந்து விலக்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கல்வி நிறுவனம் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், வேலையில் பயிற்சி என்பது பாடத்தின் ஒரு பகுதியாக இருந்தால், பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் மாணவர் பயிற்சியை முடித்திருந்தால் EPF லிருந்து விலகி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்