அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கல்வி வளர்ச்சிகாக பல நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவில் பயிற்சி நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு:
தமிழகத்தில் கொரோனா கால இடைவெளிக்கு பிறகு நடப்பாண்டில் தான் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல புதிய கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாமல் இருந்த காரணத்தினால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் விதமாக தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதை தவிர ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வி திறனை அறிந்து வகுப்புகள் நடத்துவதற்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் ஆசிரியர், மாணவர்களிடையே நல்ல புரிதல் ஏற்படும் விதமாக எவ்வாறு மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவைகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு – காரணம் இதோ! அமைச்சர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவிலான 6 நாள் உண்டு, உறைவிட கருத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் தலைமை ஆசிரியர்களுக்கு என உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்காக 9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்