தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு – காரணம் இதோ! அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - காரணம் இதோ! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - காரணம் இதோ! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு – காரணம் இதோ! அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்ததை அடுத்து இன்று பொது கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக காரணத்தால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு:

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியது. ஒவ்வொரு மாணவர்களும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து உரிய படிப்புகளை தேர்வு செய்ய கல்லூரிகளில் விண்ணப்பித்து வந்தனர். மற்ற கலை, அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறத் தொடங்கியது. மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் 12ம் வகுப்பு CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகாததால் அம்மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாக காரணத்தால் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீட் தேர்வு முடிவுக்கு பின் சில மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்கின்றனர்.

தமிழக போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவன ஓட்டுனர்கள்? அரசு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதனால் கடந்த வருடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான இடங்கள் நிரப்பபடாமல் இருந்தது. நடப்பு கல்வி ஆண்டில் அதனை தவிர்க்கும் நோக்கிலும், மாணவர்களின் நலன் கருதியும் இன்று நடைபெற இருந்த பொது கலந்தாய்வு ஆனது நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்கு பின் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நான் முதல்வன் கல்வி திட்டத்தின்படி உயர்கல்வி மற்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தோடு இணைந்து பாடதிட்டங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!