திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் – கேளிக்கை வரி விலக்கு விவகாரம்.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!
தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
கேளிக்கை வரி:
தமிழகத்தில் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான ஐ திரைப்படத்திற்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க புதுவை நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனை எதிர்த்து அத்திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
Twitter பயனர்களுக்கு புக்மார்க் செய்யும் புதிய அப்டேட் – தலைமை நிர்வாகி அறிவிப்பு!
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு வக்கீல் ‘ஐ’ என்பது தமிழ் வார்த்தை இல்லை. அதனால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடியாது என்று வாதிட்டார். மேலும் நிறுவனத்தின் சார்பில் ‘ஐ’ என்பது தமிழில் வியப்பை ஏற்படும் சொல் என கூறப்பட்டது.
இருப்பினும் ‘ஐ’ என்பது தமிழ் எழுத்ததாக இருந்தாலும், அர்த்தம் தரக்கூடிய வார்த்தை இல்லை என்று புதுவை அரசு தெரிவித்தது. இறுதியாக தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வரி விலக்கு பெறுவதற்கான நிபந்தனைகளும் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.