முடிவுக்கு வரும் ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழ் சேனலில் 1400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி” சீரியலின் கிளைமாக்ஸ் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது அந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செம்பருத்தி சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் இருந்தாலும் ஒரு சில சீரியல்கள் தான் மனதிற்கு நெருக்கமான சீரியலாக இருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ப்ரியா ராமன் நடித்து வருகிறார். அவருக்கு சின்னத்திரையில் இது தான் முதல் முறை, என்றாலும் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் பாடத்திட்டம் குறைப்பு? கிளம்பும் எதிர்ப்புகள்!
இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக தொடக்கத்தில் இருந்து நடிகை ஷபானா நடித்து வருகிறார். அவருக்கும் தற்போது பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் 1400 எபிசோடுகளை கடந்து TRPயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல திருப்பங்கள் வந்த நிலையில் சீரியலின் முடிவு எப்படி இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ரசிகர்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் செம்பருத்தி சீரியல் முடிய இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும். இந்த சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கும் எந்த மாதிரி திருப்பங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். 1400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.