தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் பாடத்திட்டம் குறைப்பு? கிளம்பும் எதிர்ப்புகள்!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடவேளையை 7லிருந்து 6ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்த முடிவிற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
தமிழ் பாடவேளை குறைப்பு:
தமிழக அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் வழக்கமாக 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடவேளை தினசரி 7 வகுப்புகள் இருந்து வந்தன. ஆனால் அரசு பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை 7ல் இருந்து ஆறாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அரசு பள்ளிகளில் தமிழ் பாடவேளை குறைக்க வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!
தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 – 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழி பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்.
Exams Daily Mobile App Download
வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான நடவடிக்கை. அதற்காக ஆங்கில பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம். தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை.எனவே, தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.