தமிழக பள்ளிக் கல்வித் துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 45,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் தற்போது வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளி மாணவர்களும் வீட்டில் இருந்து கல்வி பெறும் நோக்கில் கல்வி தொலைக்காட்சி கொண்டு வரப்பட்டு அதன் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களும் கல்வி பயின்று வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை” போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு ஆதரவளிக்க, தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டமும் கொண்டு வரப்பட்டது. அரசின் திட்டங்களுக்கு உதவும் வகையில், இளைஞர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இப்பணிகளுக்கு மொத்தம் 152 பேர் நியமிக்கப்பட உள்ளனர். senior fellows பணியிடத்திற்கு 38 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இளங்கலை (அல்லது) முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்களுக்கு தமிழ் மொழியில் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ஊதியம் மாதம் ரூ.45,000 வழங்கப்படும்.
அடுத்த 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை? அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் இவர்களுக்கான பணி மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் மூலம் உதவுதல் போன்றது ஆகும். அடுத்ததாக Fellows இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ஊதியமாக மாதம் ரூ. 32,000 வழங்கப்படும். இவர்கள் அரசின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த துணைபுரிய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை இந்த திட்டத்தில் பணிபுரியலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும்.