Wipro நிறுவனத்தில் பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ரூ.3.5 லட்சம் வரை சம்பளம்!

0
Wipro நிறுவனத்தில் பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - ரூ.3.5 லட்சம் வரை சம்பளம்!
Wipro நிறுவனத்தில் பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - ரூ.3.5 லட்சம் வரை சம்பளம்!
Wipro நிறுவனத்தில் பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ரூ.3.5 லட்சம் வரை சம்பளம்!

இந்தியாவின் 2வது பெரிய IT நிறுவனமான விப்ரோ தனது எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் 2022 திட்டத்தின் கீழ், பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் திட்டத்தின் கீழ் ப்ராஜெக்ட் இன்ஜினியர் என்ற பெயரில் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இறுதியாண்டு மாணவர்களும் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – மத்திய அரசின் புதிய விதி அமல்!

இப்போது, இந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் சம்பளமாகப் பெறுவார்கள். தவிர ஒரு வருட ஒப்பந்தப் பத்திரம் இருக்கும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2022-23 ஆம் ஆண்டில் வேலைகளில் சேர வேண்டும். இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பம் மே 2ஆம் தேதி முதல் தொடங்கும். மேலும், விண்ணப்பங்களை செலுத்துவதற்கான காலக்கெடு மே 22, 2022 ஆகும். இதற்கான ஆன்லைன் மதிப்பீடு மே 21 முதல் ஜூன் 5 வரை நடைபெறுகிறது.

முக்கிய தகுதிகள்:

  • 2021, 2022ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • BTech, BE அல்லது MTech/ME முழு நேர படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
  • இண்டரில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
  • பொறியியலில் 60% மதிப்பெண்கள் அல்லது 6.0 CGPA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு மேல் கல்வி இடைவெளி இருக்கக்கூடாது.
  • ஆறு மாதங்களுக்குள் விப்ரோ தேர்வுகள் எதையும் எழுதி இருக்கக்கூடாது.
Exams Daily Mobile App Download

ஆன்லைன் சோதனை முறை:

  • ஆன்லைன் மதிப்பீட்டுத் தேர்வு மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  • இந்த மதிப்பீடு மொத்தம் 128 நிமிடங்கள் இருக்கும்.
  • மேலும், அளவு திறன் மற்றும் ஆங்கிலம் (வாய்மொழி) திறனுக்கான ஆப்டிட்யூட் தேர்வு 48 நிமிடங்களாக இருக்கும்.

பதிவு நடைமுறை:

  • முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் Register now என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் விண்ணப்பப் படிவம் புதிய இணையப் பக்கத்தில் திறக்கிறது.
  • இதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பூர்த்தி செய்து, Apply now என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!