அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – மத்திய அரசின் புதிய விதி அமல்!

0
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு - மத்திய அரசின் புதிய விதி அமல்!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு - மத்திய அரசின் புதிய விதி அமல்!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – மத்திய அரசின் புதிய விதி அமல்!

இந்தியாவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு தானியங்கள் கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் கூடிய மின்னணு விற்பனை புள்ளி கருவிகளை சரியான அளவு இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய விதி:

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு கோதுமை மற்றும் அரிசி உணவு தானியங்கள் ரூ.2 அல்லது ரூ.3க்கு மலிவான விலையில் வழங்கப்படுகிறது. மேலும் கொரோனா காரணமாக ரேஷன்கார்டுக்கான குறைதீர் முகாம் நடத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் மே மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாம் மூலமாக ரேஷன் அட்டைகளில் ஏதேனும் மாற்றங்களை செய்ய நினைத்தால் மேற்கொள்ளலாம். இதில் குறிப்பாக ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும்.

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 76 லட்சம் பேர் – முக்கிய புள்ளி விபரங்கள் வெளியீடு!

தற்போது ரேஷன் கடைகளில் சரியான அளவு ரேஷன் பொருட்களை வழங்காமல் குறைவாக வழங்குகின்றனர். இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. அதாவது, ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் கூடிய மின்னணு விற்பனை புள்ளி கருவிகளை சரியான அளவு உள்ளதாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும். இது ரேஷன் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!