தமிழகத்தில் வரும் ஜூன் 24ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கில் பல மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் வருகிற ஜூன் 24 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் பல இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அதனால் வேலைவாய்ப்பின்மை விகிதம் கணிசமாக அதிகரித்தது. அதனை குறைக்கும் நோக்கில் பல மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஏகப்பட்ட தனியார் துறைகள் கலந்து கொள்வார்கள்.
Exams Daily Mobile App Download
தகுதி உடையவர்களுக்கு தனியார்துறைகளில் வேலை கிடைக்கும். இந்த முகாம் மூலமாக ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் சேர்ந்து வருகிற ஜூன் 24 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த முகாமானது ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் – வாரியம் தகவல்! பொதுமக்கள் அதிருப்தி!
தகுதி உள்ள நபர்கள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற இருக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் ஆகியவை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 20க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.