சென்னையின் முக்கிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் – வாரியம் தகவல்! பொதுமக்கள் அதிருப்தி!
சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் அளித்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் இருந்து சென்னையின் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பொது மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நெம்மேலியில், கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையம் விரிவாக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டுமாக சென்னையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக சென்னையில் மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை (ஜூன் 23) காலை வரை குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழக ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு – உயர்கல்வித்துறையின் புதிய உத்தரவு!
இதனால் வரும் வியாழக்கிழமை காலை 10 மணி வரைக்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈச்சம்பாக்கம், நீலாங்கரை மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே மக்கள் வேண்டிய அளவுக்கு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர உதவிகளுக்கு லாரி மூலம் குடிநீர் பெற அப்பகுதியில் இருக்கும் பொறியாளர்களை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.