தமிழக ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு – உயர்கல்வித்துறையின் புதிய உத்தரவு!
அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்கள் பணி நீட்டிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வி துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணி நீட்டிப்பு:
தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைய பெற்றுள்ளது. அறிவியல், பொறியியல், தொழில் மேலாண்மை, விவசாயம் போன்ற உயர்கல்வி படிப்புகளை வழங்குகிறது. . இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல்தனியார் பல்கலைக் கழகம் ஆகும். பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு மற்றும் அதிகப்படியான பணியாளர்கள் நியமனம் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதால் 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியும் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட தொலைநிலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
பல அறிஞர்களையும், தமிழ் புலவர்களையும் உருவாக்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்திற்கு உண்டு. இப்பல்கலைக்கழகத்தில் 370 உபரி ஆசிரியர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் விதிகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால் அந்த 370 உபரி ஆசிரியர்களும், தமிழகத்தில் உள்ள பிற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது இவர்களுக்கு பணியை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
இதனை எதிர்த்து சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த தங்க முனியாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மூன்றாண்டுகளுக்கு பணி நீடிப்பால் புதிதாக Phd., பட்டம் பெற்றவர்கள் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியில் சேர முடியாத ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.அதனால் பணி நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கு விசாரணையில் தமிழக உயர்கல்வி துறை செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.