தமிழகத்தில் ஜூன் 11ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கானவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தஞ்சையில் வருகிற ஜூன் 11ம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. அதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் வருகிற ஜூன் 11ம் தேதி அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்றவை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் தாராசுரம் கே.எஸ்.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசு விளக்கம்!
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள், பி.இ மற்றும் நர்சிங் உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இணைந்து தங்களின் தகுதிக்கேற்ப பணிகளை பெற்று கொள்ளலாம். அத்துடன் இம்முகாமில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும் இம்முகாமில் தங்களின் சுயவிவரக்குறிப்பு மற்றும் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.