அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசு விளக்கம்!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் ஒரே எண்ணத்தில் ஒன்றிணையத் தொடங்கியுள்ளனர். சமீப காலமாக இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்:
2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. பின்னர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த சில வாரங்களாக பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய விவாதம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச தேர்தல்களின் போதும் இது ஒரு முக்கிய விஷயமாக பேசப்பட்டது. உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் இது குறித்த சர்ச்சை உள்ளது.
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இது குறித்து அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மத்திய ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்கப் போகிறதா, மத்திய அரசு அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தால், இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என பல தரப்பில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. அதாவது கடந்த மே மாதம் 29ம் தேதி, மத்திய அமைச்சரவை கூட்டம் ஓன்று நடைபெற்றதாகவும் அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Exams Daily Mobile App Download
மேலும் 2004ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவதற்கு தேவையான நிதி , மத்திய பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் சமூகவலைத்தளத்தில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பரவி வரும் அறிக்கை உண்மையல்ல என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மே 29ம் தேதி அப்படி ஒரு அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை, இது தவறான தகவல் என அரசு தெரிவித்துள்ளது.