தமிழகத்தில் நாளை (ஜூலை 22) வேலைவாய்ப்பு முகாம் – அறிவிப்பு வெளியீடு!
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்திற்கு இருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் நாளை நடைபெற இருக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முழு அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் நாளை நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், நாளை நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்பவர்களின் வயது 30 க்கும் மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வனத்துறையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை!
இதுமட்டுமல்லாமல், அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்கள் சார்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, விருப்பமும் தகுதியும் பெற்ற இளைஞர்கள் சென்னை ஆலந்தூர் சாலையில் அமைந்துள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Namakkal District…Rasipuram talukka…Eppo job enquiry nadakkum…