தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் உள்ளே!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஜூலை 2ம் தேதி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் மக்கள் தடுப்பூசிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் கொரோனா கால கட்டத்தில் தங்களின் வேலைகளை இழந்தவர்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவருக்கு உதவும் வகையில் அரசு மத்திய மாநில அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
கல்லூரி படிப்பை முடித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பிற்கு ஏற்ப வேலைகளை தேர்ந்தெடுப்பதில் மிகப் பெரிய சிரமத்தை எதிர்கொள்கின்றனர். படிப்பிற்கேற்ற வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இவ்வாறு வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவும் வகையில் அவ்வப்போது மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் ஜூலை 2ம் தேதி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
காசி யாத்திரை செல்வோருக்கு ரூ.5,000 நிதியுதவி – அரசு அறிவிப்பு!
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், மகளிர் திட்ட அலுவலகம் ஆகியவை சார்பில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 10 ,12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் ஓட்டுநர்கள், தையல் பயின்றவர்கள், தொழிற் கல்வி பயின்றவர்களும் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்க இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.