சேலம் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – நவ.26ம் தேதி நேர்காணல்!
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் படிக்காதவர்கள் மற்றும் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.26ம் தேதி நடைபெற உள்ளது.
தனியார் துறை வேலை:
தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து சேலம் மாவட்ட கெலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் நாளை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள மாவட்டங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன் பின்னர் சேலம் மாவட்டத்தில் வரும் நவ.26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகமானது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்த உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். அதனால் இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. , நர்சிங், அக்ரி, பார்மஸி, பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து படிப்புகள் முடித்தவர்களும் கலந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் கிலோ 150 ரூபாயை தொட்ட தக்காளியின் விலை – பதுக்கலை தடுக்க நடவடிக்கை!
இந்த முகாமானது சேலம் மாவட்ட சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. அதனால் விருப்பமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் சுயவிபரம், பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் கார்டு, கல்விச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை நேர்காணலுக்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்கள் அறிய 0427 – 2401750, 94990 – 55941 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.