தமிழகத்தில் நாளை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள மாவட்டங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள மாவட்டங்கள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள மாவட்டங்கள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள மாவட்டங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (24.11.2021) திருவள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின் தடை ஏற்ப்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் அவ்வவ்போது மின் விபத்துகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மின் இணைப்புகளில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மின் கம்பங்கள் பழுதடைதல் தான். இந்த நிலையில் மின் வாரியம் பாதுகாப்பான மின்சாரத்தை பயனர்களுக்கு வழங்குவதற்காக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் ஆங்காங்கே மின் கசிவுகள் ஏற்பட்டு வருகிறது. அதனால் மின் ஊழியர்கள் மின் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 25 முதல் 7, 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

இதையடுத்து மின்கம்பங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (24.11.2021) திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகா், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி சாலை, ஈங்கூர் சாலை, குமாரபுரி, சக்தி நகா், பெரியாா் நகா், நாமக்கல் பாளையம், அறச்சலூர் சாலை, ஆகிய பகுதிகள்

தமிழகத்தில் கிலோ 150 ரூபாயை தொட்ட தக்காளியின் விலை – பதுக்கலை தடுக்க நடவடிக்கை!

மேலும் குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என். நகா் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மல்லிங்குப்பம், சின்னம்பேடு, போந்த வாக்கம், அகரம் ,காரணி, புதுப்பாளையம், கோசவன்பெட்டை, ஆரணி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் அத்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!