சென்னையில் ஜூலை 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – அறிவிப்பு வெளியீடு!
சென்னையில் ஜூலை 22ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளனர். இந்த முகாம் குறித்து தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தவறாது வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இந்த முகாம்களில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி தகுதியுடைய இளைஞர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஜூலை 22ம் தேதி மற்ற மாவட்டங்களை தொடர்ந்து சென்னையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – பள்ளியில் சேர்க்க மறுக்கும் பெற்றோர்கள்!
இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. முகாமானது காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 8,10,12 ம் வகுப்பு படித்தவர்கள், பட்டபடிப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தொழில்நெறி வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் 20க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
Exams Daily Mobile App Download
தற்போது வேலை வாய்ப்புகளை தேடி வருவோர் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக நடந்து வரும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது ஏராளமான மக்கள் வேலை இழந்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில் வேலைவாய்ப்பு என்பது அவசிய ஒன்றாக உள்ளது. அதிலும் படித்த இளைஞர்கள் வேலை தேடி அலைந்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.