கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – பள்ளியில் சேர்க்க மறுக்கும் பெற்றோர்கள்!
12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதில் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை மொத்தமாகவே சேதப்படுத்தியுள்ளனர். இந்த சமயத்தில் பெற்றோர்கள் அதே பள்ளியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்கொலை விவகாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி அந்த பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். மேலும், மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் தான் முழுக்க முழுக்க காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கேட்டு பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும், போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறை, நாற்காலி, பள்ளி வாகனங்கள் என பள்ளியின் உடைமை பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இது மட்டுமல்லாமல் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் முக்கிய சான்றிதழ்கள், ஆவணங்கள் என அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால், தற்போது அந்த பள்ளியில் படித்து வரும் 4,500 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்படைவதால் விரைவில் மீண்டும் பள்ளியை தொடங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
இதனிடையே, கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்கலாமா என சோதனை நடைபெற்றது. ஆனால், இதே பள்ளியில் வகுப்புகளை நடத்துவதற்கு சாத்தியக்கூறுகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைவில் மாணவர்களை இந்த பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார். ஆனால், பெற்றோர்கள் இதனை ஏற்க மறுத்து என் குழந்தைகள் இதே பள்ளியில் தான் பயில வேண்டும் அதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.