தமிழகத்தில் நாளை (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மொரப்பூா் மற்றும் இருமத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள மின்கம்பங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. அதாவது, மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என முழுமையாக சரிபார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால் எதிர்பாராத விதமாக மின்தடை ஏற்படுகிறது. அதாவது, மழைபொழிவின் போது காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் வயர்கள் அறுந்து மின் விபத்துகள் ஏற்பட காரணமாகின்றன. மழைக்காலங்களில் மட்டுமல்லாமல் அனைத்து மாதமுமே மின்கம்பங்களில் உள்ள பழுதுகள் சரிபார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மொரப்பூா் மற்றும் இருமத்தூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்யப்படவுள்ளதால் மொரப்பூா் மற்றும் இருமத்தூா் பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் முழுக்க நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் ஆா்.ரவி தெரிவித்துள்ளாா். தருமபுரி மாவட்டத்தில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் இதோ,
இந்திய ராணுவத்தில் 2800 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்!
அதாவது, மொரப்பூா், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனூா், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூா், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி, கம்பைநல்லூா், பூமிசமுத்திரம், கே.ஈச்சம்பாடி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டானூா், பெரமாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, இருமத்தூா், திப்பம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.