வீட்டில் இருந்து வேலை செய்யும் (WFH) முறையை விரும்பும் ஊழியர்கள் – ஆய்வு அறிக்கை தகவல்!
இப்போதுள்ள கால கட்டத்தில் சுமார் 50% தொழில் வல்லுநர்கள் தங்களுடைய வேலைகளை மாற்ற விரும்புவதாகவும், அதிகமானோர் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புவதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று தகவல் அளித்துள்ளது.
WFH முறை
இந்தியாவில் உள்ள 50 சதவீதத்துக்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் அடுத்த மூன்று மாதங்களில் தங்கள் வேலையை மாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வுத்தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, ஐந்தில் நான்கு தொழில் வல்லுநர்கள் ஒரே வேலையை தொடர விரும்புகிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறினாலும் பெரும்பாலானோர் வேலை செய்ய விரும்பும் இடம் மற்றும் நகரத்தை மற்ற இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் சராசரியாக ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் ஐந்து புதிய வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஆய்வு வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக, 22 சதவீதம் பேர் எப்போதும் வேலைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. அதே சமயம் 30 சதவீதம் பேர் ஒவ்வொரு மாதமும் ஒருமுறை வேலை தேடுகிறார்கள். இது குறித்து apna.co ஆல் நடத்தப்பட்ட ஆய்வில், அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களில் உள்ள 5000க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் பங்கேற்றனர். இதில் புதிய வேலையைத் தேடுவதற்கான முக்கிய தூண்டுதல்களை குறிப்பிடுகையில், சுமார் 74 சதவீத பயனர்கள் அதிக சம்பளத்தை விரும்புவதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் 37 சதவீத பயனர்கள் தொழில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது.
தமிழக பொதுப்பணித் துறையில் 500 காலிப்பணியிடங்கள் – சங்க பொதுச்செயலாளர் தகவல்!
அடுக்கு 1 நகரங்களில் உள்ள தொழில் வல்லுநர்கள் வேலை தேடும் போது அதிக ஆர்வத்துடன் இருந்தாலும், அடுக்கு 2 பயனர்கள் பெரும்பாலும் அதிக சம்பளத்தால் இயக்கப்படுகிறார்கள் என்பதையும் கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. இருப்பினும், தொழில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் நபர்கள், பணமே முதன்மையான உந்துதலாக இருப்பதால் வேறு வேலையைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். மேலும் பணியாளர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீடு, குழந்தை பராமரிப்புக்கான க்ரீச் சேவைகள் போன்ற கூடுதல் பலன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது
இது தொடர்பாக apna தலைமை இயக்க அதிகாரி கர்ண சோக்ஷி கூறுகையில், ‘பணியாளர்கள் இன்று அனைத்து வணிகத்திற்கும் முதுகெலும்பாக உள்ளனர். இந்த வேளையில் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது முக்கியம். கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளை முதலாளிகள் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என்றும், அதிகரித்து வரும் தொழிலாளர்களின் பணித் தரத்தை மேம்படுத்துவதில் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர தனிநபர்கள் வீட்டிலிருந்து வேலையை (WFH) தேடும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!
அதாவது, WFH முறை குறிப்பாக இந்தியாவில் பெண் பணியாளர்களிடையே ஈர்க்கப்பட்டு வருகிறது. ஆண்களுடன் ஒப்பிடுகையில், அதிகமான பெண்கள் WFH வேலையை தேடுகிறார்கள். ஏனென்றால் இது அவர்களின் வீட்டு வேலைகளை ஆதரிக்கவும், வீட்டிலிருந்து வருமானத்தை உருவாக்குவதற்கான சிறந்த முறையாகவும் இருக்கிறது. இதற்கிடையில், புதியவர்கள் மற்றும் சமீபத்திய பட்டதாரிகள் பெரும்பாலும் தங்கள் படிப்புகள் அல்லது கல்வி தொடர்பான வேலைகளைத் தேடுகிறார்கள். இருப்பினும், அவர்களின் லட்சிய வேலைக்கான தேடல் நிலுவையில் உள்ளது என கணக்கெடுப்பு கூறுகிறது.