தமிழக பொதுப்பணித் துறையில் 500 காலிப்பணியிடங்கள் – சங்க பொதுச்செயலாளர் தகவல்!
தமிழக பொதுப்பணித்துறையில் 2015 ம் ஆண்டுக்கு பிறகு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படாததால் 500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசுப் பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் போட்டித் தேர்வுகள் நடைபெறாததால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இதனால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப 2022ம் ஆண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்தது அதன் படி குரூப்2,2A, 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது.
இன்று அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – போராட்டம் எதிரொலி!
தற்போது 7000 க்கும் குரூப் 4 & VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது பொதுப்பணி துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பதவியில் 500 பணியிடங்கள் இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் சங்க பொதுச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படாததால் காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு – அரசாணை வெளியீடு!
மேலும் நேரடியாக பொறியியல் கல்லூரி முடித்தவர்களும், டிப்ளமோ படித்து அரசு வேலையில் சேர்ந்து பின் 5 ஆண்டு பணி அனுபவத்துடன் மாலை நேர கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தவர்களும் உதவி பொறியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களும் இளநிலை பொறியாளர்களும் 3:1 விகிதத்தில் உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற அரசாணை வெளியிடப்பட்டது. இளநிலை அல்லது பணி மாற்றல் பொறியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசு தலையிட்டு நீதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.