தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!
இந்துசமய அறநிலையத்துறையில் மொத்தமாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணிக்கு 3 காலி பணியிடங்கள் உள்ளன. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில் உள்ள 3 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்துசமய அறநிலையத்துறையில் திருநெல்வேலி உதவி ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணிக்கு காலிப் பணியிடங்கள் உள்ளன. அதாவது இந்த பணியிடங்கள் தற்காலிகமாகவே நிரப்பப்படவுள்ளது. தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SBI, Post Office சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகித விபரங்கள்!
மேலும், அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு 2 காலியிடங்கள் உல்ளன. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஓட்டுநர் (Staff Driver) பணிக்கு 1 காலிப் பணியிடம் உள்ளது. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 2.75% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
விண்ணப்பதாரரின் வயது 01.07.2021 ன் படி 18 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும், BC,MBC, DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நேர்முகத் தேர்வின் மூலமாகவே தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, ஏ.ஆர்.லைன் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி என்கிற முகவரிக்கு ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.