PM Kisan திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறையை அப்டேட் செய்வது எப்படி?
PM Kisan திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று வரும் விவசாயிகளுக்கு eKYC செயல்முறையை அப்டேட் செய்ய ஜூலை 31ஆம் தேதி வரைக்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி eKYC செயல்முறையை அப்டேட் செய்வது என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PM Kisan திட்டம்:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் நலனுக்காக பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் என்கிற ஒரு திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகள் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 2000 என்கிற வீதத்தில் ஒரு ஆண்டிற்கு மட்டுமே 6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதுவரைக்கும் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் மூலமாக 11 தவணைகளில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பத்தாவது தவணை நிதி உதவி கடந்த ஆண்டு மே 15 ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதேபோல 11 ஆவது தவணையையும் இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு வழங்கியது. eKYC செயல்முறை முடிக்காதவர்களுக்கு 11 ஆவது தவணை கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியானது. அனைத்து செயல்முறைகளையும் சரியாக முடித்த விவசாயிகளுக்கு 11 ஆவது தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் eKYC செயல்முறையை அப்டேட் செய்ய ஜூலை 31ஆம் தேதி வரைக்கும் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி eKYC செயல்முறையை அப்டேட் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
Exams Daily Mobile App Download
தற்போது முதலில் https://pmkisan.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஹோமேஜ் பக்கத்தில் உள்ள இகேஒய்சி என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்பு, அதில் ஆதார் எண்ணை குறிப்பிட்டு கேப்சா கோடை எண்டர் செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்கவும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு கெட் ஓடிபி என்கிற பகுதியை கிளிக் செய்யவும். உடனே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை பதிவு செய்துவிட்டால் eKYC செயல்முறையை அப்டேட் செய்துவிடலாம்.