TNPSC குரூப் 1 தேர்விற்கான கல்வி தகுதி, வயது வரம்பு? முழு விவரம் இதோ!
குரூப் 1 தேர்வு அறிவிப்பானையை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
TNPSC குரூப் 1 தேர்வு:
தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 உதவி ஆணையர் வணிகவரித்துறை, 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், 7 உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சித் துறை, 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தமிழ்நாடு பொதுப்பணி, என 92 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ஐந்தருவியில் குளிக்க அனுமதி!
இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22.08.2022 ஆகும். மேலும் விண்ணப்பதாரர்கள் tnpscexams.in என்ற இணையதளத்தில் ஒரு முறை பதிவு மற்றும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்யலாம். அதாவது குரூப் 1 தேர்வுக்கு பதிவுக் கட்டணம் ரூ.150ம் முதனிலைத் தேர்வுக்கு ரூ.100 ம் முதன்மை எழுத்துத் தேர்வு ரூ.200ம் விண்ணப்பக் கட்டணமாக பெறப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இதையடுத்து முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் கல்வி தகுதி: TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதாவது வணிகம் மற்றும் சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமோ, வணிகம் அல்லது சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்கலாம். அது போல், வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமோ, பொருளாதாரம், கல்வி, சமூகவியல், புள்ளியியல் அல்லது உளவியலில் பட்டம் பெற்றிருக்கலாம்.
சமூக அறிவியல், சமூகவியலில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும் தொழில்துறை அல்லது தனிநபர் மேலாண்மை அல்லது தொழிலாளர் நலனில் அனுபவம், கிராமப்புற சேவையில் முதுகலை பட்டமும் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் வயது வரம்பு : 21 வயது நிறைவடைந்தவராகவும் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம் : இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.