தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தம், மீண்டும் இ-பாஸ் நடைமுறை! ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?

0
தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தம், மீண்டும் இ-பாஸ் நடைமுறை! ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?
தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தம், மீண்டும் இ-பாஸ் நடைமுறை! ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?
தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தம், மீண்டும் இ-பாஸ் நடைமுறை! ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேருந்துகளை நிறுத்துவது குறித்தும், இ-பாஸ் முறையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் மருத்துவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் அதிகம் வெளி இடங்களுக்கு செல்லும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளில் மருத்துவம், மளிகை, காய்கறி, உணவகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை – ஜன.27 கடைசி நாள்!

மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் மேம்படும் ஊரடங்கை நீட்டிப்பது, மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் இன்று மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், செயலாளர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவ குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது. இது குறித்த முக்கிய முடிவுகள் குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

பான் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அதில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் விழாவிற்கு பொருட்கள் வாங்க மக்கள் பொது இடங்களில் கூடுவர். மேலும் வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் பேருந்துகளில் பயணம் செய்வர். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து தொற்று பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். நீண்ட துார பேருந்து போக்குவரத்து சில நாட்கள் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மீண்டும் இ-பாஸ் முறையை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!