தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை – ஜன.27 கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதையடுத்து கோவில்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்:
தமிழக அரசு அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து கோவில்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணியில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு – அனைத்து கல்வி நிலையங்களும் மூடல்!
இதற்கு 18 முதல் 50 வயது நிரம்பியவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இப்பணியிடத்திற்கு ரூ.5000 தொகையை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
இறப்பு & திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
இந்த காப்பீடு தொகையானது இறுதியாக அவர்களுக்கு வட்டியுடன் திருப்பி கொடுக்கப்படும். இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வருகிற 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பங்களை அஞ்சலகத்தில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி – 628501 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 04632-220368 – கோவில்பட்டி , 04636-222313 – சங்கரன்கோவில், 04633-222329 -தென்காசி என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.