தமிழக அரசில் 15,000 ரூபாய் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Case Worker பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker பதவிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Case Worker பணிக்கு அரசு அரசால் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு social work, counselling psychology / development management போன்றவற்றில் Master Degree முடித்திருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றோராக இருப்பது அவசியமாகும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வான பின்பு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.