தமிழகத்தில் போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் போதைப்பொருளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவரை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.
போதைப்பொருள்:
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் அதில் இருந்து மீளவே முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இதனால், உடனேயே போதைப்பொருள் விற்பனையை முழு ஆற்றலை கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்வது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும், போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகி வெளியே வரமுடியாமல் தவிப்பவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்படும் – தலைமைச் செயலாளர் அறிவிப்பு!
மேலும், போதைப்பொருள் தான் ஒருவரை கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் செய்ய தூண்டுகிறது எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் போதைப்பொருளிற்கு மகன் அடிமையாகியுள்ளாரா என்பதை கவனிக்க வேண்டும் எனவும், பள்ளி நிர்வாகமும் இதில் முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுகிறதா என்பதை மாநில எல்லைப்புற மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.