தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்படும் – தலைமைச் செயலாளர் அறிவிப்பு!
44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு நாளில் தலைமைச் செயலாளர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டு:
முதன் முறையாக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் நடைபெற்றது. நேற்றுடன் இந்த போட்டி நிறைவடைந்த நிலையில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதாவது, விளையாட்டு போட்டி என்று எடுத்துக்கொண்டால் அதில் வெற்றியாளர்கள், தோல்வியாளர்கள் என அனைவரும் இருப்பார்கள். ஆனால், ஒரு நாட்டின் வெற்றி என்று வரும் போது அதை அனைவரும் சேர்ந்தே கொண்டாடுகிறார்கள்.
Exams Daily Mobile App Download
ஆனால், இன்றைய உலகில் இளைஞர்கள் தங்களை சமூக வலைப்பக்கங்களிலேயே மூழ்கடிக்கின்றனர். இதிலிருந்து மீண்டு வந்து மனதை ஒருமுகப்படுத்த செஸ் விளையாட்டு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதாவது, நம்முடைய செயல்பாடுகள் மூலமாக பொறுப்புகளை உணருவதற்கும், எதிர்பாராத சமயங்களில் நமக்கு ஏற்படும் துன்பங்களை எதிர்கொள்ளவும் செஸ் விளையாட்டு நமக்கு கற்று கொடுக்கிறது. அதே நேரத்தில், போர் புரிவதற்கான அனைத்து திறனையும் செஸ் விளையாட்டு நமக்கு தருகிறது மற்றும் நினைவாற்றலையும் பெரிதளவில் மேம்படுத்துகிறது.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடல்? வலுக்கும் கோரிக்கை
மேலும், ஆர்மீனியா நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்மீனியா நாட்டை போலவே தமிழகத்திலும் கூடிய விரைவில் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்படும் என தலைமை செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார். மேலும், செஸ் விளையாட்டில் பெண்களுக்கு அதிக அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டில் உள்ள குதிரையை போலவே அனைத்து தடைகளையும் உடைத்துக்கொண்டு முன்னேறி சென்று கொண்டே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.