கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவியில் அதிரடி மாற்றம் – ஏப்ரல் 1 முதல் நடைமுறை!

0
கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவியில் அதிரடி மாற்றம் - ஏப்ரல் 1 முதல் நடைமுறை!

தமிழக அரசு சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிதியுதவியில் அதிரடி மாற்றம்:

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14,000/- ரூபாய் நிதியுதவியும், ரூ.4,000/- மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி, கர்ப்பிணி பெண்கள் 12 வாரத்துக்குள் அரசு ஆரம்பர சுகாதார நிலையங்களில் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு அவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பொருட்களானது 05 தவணைகளாக இதுவரை கொடுக்கப்பட்டு வந்தது.

IIT மெட்ராஸ் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2.5. லட்சம்!

இத்தகைய திட்டத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகளின் காரணமாக 05 தவணையாக வழங்கப்பட்ட நிதியுதவியானது 03 தவணையாக மாற்றப்பட்டுள்ளதாக அரசானது தற்போது அறிவித்துள்ளது. அதாவது பெண்களின் கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் 6,000 ரூபாயும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் 6,000 ரூபாயும், குழந்தை பிறந்த 9 வது மாதத்தில் 2,000 ரூபாயும் நிதியுதவியாக இனி வழங்கப்படவுள்ளது. மேலும் ஊட்டச்சத்து பொருட்களானது மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் 02 தவணையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட இம்மாற்றங்கள் வருகின்ற ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!