மக்கள் தங்கள் முதலீட்டில் சிறந்த மற்றும் அதிகப்படியான லாபத்தை எதிர்நோக்கி சேமிக்க தொடங்குகின்றனர். அந்த வகையில் மாதாந்திர வருமானத்தை அளிக்கும் வகையிலான அஞ்சலகத்தின் திட்டம் குறித்த தகவல்களை இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சேமிப்பு திட்டம்:
பயனர்கள் தங்களது முதலீட்டை செலுத்திய பின்னர் மாதம் தோறும் வருமானத்தை பெரும் வகையில் அஞ்சல் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி விகிதமானது உங்களது முதலீடு தொகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டியானது உங்கள் கணக்கில் மாதம் தோறும் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக ஒருவர் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதலீட்டை செய்ய முடியும். அதிகபட்சமாக ரூபாய் ஒன்பது லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்காக இருக்கும் பட்சத்தில் ரூபாய் 15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும்.
ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். திட்டம் தொடங்கிய ஒரு ஆண்டு முடியும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது. ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக பணத்தை பெற விரும்பினால் அதற்கான அபராத தொகையை செலுத்த வேண்டும். நாட்டிலுள்ள எந்த அஞ்சல் அலுவலகத்திலும் கணக்கை மாற்றிக் கொள்ளவும் வசதிகள் உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இத்திட்டத்தில் பலன் அடைய முடியும்.