தமிழகத்தில் மதுரை – பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
வந்தே பாரத்
தமிழகத்தில் மதுரை – பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. அதற்காக ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் பயன்படுத்தப்பட்டது. மேலும் ரூட் மேப் தயாரிக்கப்பட்டு அது வெளியாகி இருக்கிறது. மேலும் 10 மணி நேரத்தில் மதுரையில் இருந்து பெங்களூரு செல்ல இந்த சேவை தொடங்கப்பட இருக்கிறது.
தர்பூசணியிலும் கலப்படமா? பொதுமக்களே உஷார் – ஷாக் பதிவு!
இந்த ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தருமபுரி, ஓசூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். மேலும் கூடுதல் நிலையங்களும் இணைக்கப்பட இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் பல மாவட்டங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதனால் மக்களின் வசதிக்காக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அமல்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.