பல வருடங்களாக பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில இது குறித்தான அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பத்து ரூபாய் நாணயம்:
நாட்டில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 10 ரூபாய் நோட்டுக்களுடன் 10 ரூபாய் நாணயங்களும் அறிமுகம் செய்யப்பட்டது. தங்க நிறத்திலான பத்து ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருகிறது. பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் தகவல்களால் பல இடங்களிலும் இதனை வாங்க மறுத்து விடுகின்றனர். இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து இடங்களிலும் செல்லுபடி ஆகும் என்றும், இதனை வாங்க மக்கள் மறுக்கக்கூடாது என்றும் தெரிவித்தது.
ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
இந்நிலையில் சென்னை தவிர்த்து தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பத்து ரூபாய் நாணயத்தை பெட்ரோல் பங்குகள், கடைகள், வங்கிகள் போன்றவை வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரி மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் பொதுமக்களிடம் பத்து ரூபாய் நாணயங்கள் பெற்றுக் கொள்வது குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், உள்ளூர் அளவில் இதற்காக செய்திகளை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பது குற்றம் என்று அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.