தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இரு மடங்காகும் ஓய்வூதியம் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை 3000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இதனை தற்போது இரு மடங்காக உயர்த்த உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்ப்போம்.
ஓய்வூதியம் உயர்வு
தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆனால் கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஏராளமான பலன்கள் கிடைப்பதால் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக அரசு பணிகளில் இவர்களுக்கு கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு போட்டித்தேர்வில் போனஸ் மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்களை சிறப்பிக்கும் வகையில் விருதுகளும் கொடுக்கப்படுகிறது. சர்வதேச போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் மற்றும் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு 3000 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை தற்போது இரு மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் வெளியிட்டுள்ளதாவது, தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு 6000 ரூபாய் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வு வயதான விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.