தமிழகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி – முக்கிய அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமை திறன் மற்றும் மேலாண்மை திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. அதற்கான முழு விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலாண்மை திறன் பயிற்சி:
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 2022-2023 கல்வியாண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கைகளை வெளியிட்டிருந்தார். அதாவது, பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதாவது, பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என மொத்தமாக 12,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களை கொண்டு பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை ஆகிய பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்தாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி இராஜபாளையம் வேங்கநல்லூரில் உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரைக்கும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழியில் ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு
மேலும், இந்த தலைமை ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்திலேயே தங்கி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தங்களது மடிக்கணினியுடன் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 7 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமையாசிரியர்கள் இந்த தலைமைப்பண்பு பயிற்சி பற்றிய விவரங்களை அறிய விரும்பினால் 9442570306 , 9345570306 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.