தமிழகத்தில் அதிகமாக பரவும் இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ வைரஸ் – மருத்துவர்கள் எச்சரிக்கை!
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நோய் பாதிப்புகளும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ வைரஸ் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’
தமிழகத்தில் மழைக்காலம் முடிந்து தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. அப்படி பருவநிலை மாற்றம் காரணமாக நோய் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ அதிகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் பாதிப்பு சிறுவர்களையும், வயதானவர்களையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையும் பாதிக்கிறது.
மேலும் இந்த காய்ச்சல் மூன்று வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஏ-டைப் லேசான காய்ச்சல், பி-டைப் மிதமான காய்ச்சல், சி-டைப் தீவிரமான காய்ச்சல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சாதாரண காய்ச்சல் வந்தாலும் அதன் பின் இருமல், உடல்வலி போன்ற பாதிப்புகள் வருகிறது. மேலும் இந்த பாதிப்பு இரண்டு வாரங்கள் வரை இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது