சர்வதேச மகளிர் தினம் 2023: இலவச கண் பரிசோதனை – வெளியான சூப்பரான அறிவிப்பு!
சர்வதேச அளவில் நாளை மகளிர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தற்போது அகர்வால்ஸ் கண் மருத்துவமனை பெண்களுக்கான சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கண் பரிசோதனை
உலகம் முழுவதும் நாளை (மார்ச் 8) பெண்களின் சாதனை மற்றும் வெற்றிகளை கொண்டாடும் வகையில் மகளிர் தினம் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், அகர்வால்ஸ் கண் மருத்துவமனை பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை வழங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையிலுள்ள தங்களின் 18 கிளைகளிலும், பெண்கள் இலவசமாக கண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகமாக பரவும் இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ வைரஸ் – மருத்துவர்கள் எச்சரிக்கை!
இதற்கான முகாம் வருகிற மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான தலைவர் தெரிவித்துள்ளதாவது, பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் தன்னெதிர்ப்பு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் தங்களை தன்னெதிர்ப்பு நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இதில் கலந்து கொள்ள 80809 99000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.