நீட் தேர்வர்கள் கவனத்திற்கு – தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். இந்த ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
சர்வதேச மகளிர் தினம் 2023: இலவச கண் பரிசோதனை – வெளியான சூப்பரான அறிவிப்பு!
இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி நீட் விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1,600ல் இருந்து ரூ.1,700ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500ல் இருந்து ரூ.1,600ஆகவும், எஸ்சி எஸ்டிக்கு ரூ.900ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.