தமிழகத்தில் வருகிற பிப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 16ம் தேதி அன்று தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. அதனால் இந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதில் குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கும் அத்துடன் திருவிழாக்கள் நடத்துவதற்கும் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி தற்போது அனைத்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு திருவிழாக்களை கொண்டாடப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.13) முழு ஊரடங்கு அமல்? புதிய தளர்வுகள் அறிவிப்பு!
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஞானமாமேதை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா நடைபெறும். கன்னியாகுமரியில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் விழாவில் இதுவும் ஒன்று ஆகும். மேலும் இவ்விழாவுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 16ம் தேதி அன்று தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா நடைபெற உள்ளது.
IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் – லீக் போட்டிகளில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள்!
இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது , தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 16ம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வருகிற 26ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது