IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் – லீக் போட்டிகளில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள்!
2022 ஆம் ஆண்டுக்கான IPL கிரிக்கெட் போட்டிகள் வருகிற மார்ச் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான ஏலத்தில் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் லீக் போட்டிகளில் இருந்து சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
IPL 2022:
IPL ஏலம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து வீரர்களாகிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ரூட், ஸ்டார்க் ஆகியோர் இந்த ஆண்டுக்கான IPL மெகா ஏலத்தில் விருப்பம் தெரிவிக்காததால் அவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்தது . இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய வீரர்களாக திகழ்ந்து வைத்த ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் அணியில் இடம் பெறாமல் உள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜூன் முதல் வாரத்தில் உலக சாம்பியனான நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் 2022 இறுதி போட்டியில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் நட்சத்திரங்கள் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நாளை முதல் தேர்வு!
ஐபிஎல் சீசனின் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) டெஸ்ட் வீரர்கள் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தது. இதனால் ஐபிஎல் 2022 இறுதி போட்டியில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் 2022 முழுவதும் இங்கிலாந்து வீரர்கள் என்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தின் காரணமாக IPL ஆரம்பத்தில் இருந்து சில வீரர்களும் மற்றும் ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் சிலர் வீரர்களும் விலகுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது .
EPFO பயனர்கள் கவனத்திற்கு – கொரோனா நிவாரணம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு? முழு விவரம் இதோ!
மேலும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் காரணமாக இலங்கை வீரர்கள் இரண்டு வாரங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் காரணமாக, மே 8 முதல் 23 வரை நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் பங்கேற்க மாட்டார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பிசிசிஐக்கு தெரிவித்துள்ளது, ஆனால் ஐ.பி.எல். லிட்டன் தாஸ், தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் போன்ற வீரர்கள் முழுமையாக பங்கேற்க உள்ளார்கள்.